Tuesday, January 5, 2016

களமுனைகளில் மிதிவெடிகளின் பயன்பாடு


களமுனைகளில் மிதிவெடிகள் புதைக்கப்படுவது எதிரியின் முன்னேற்றத்தைத் தடுப்பதற்காக அல்ல. எதிரியின் முன்னேற்றத்தைத் தாமதப்படுத்துவதற்காகவே களமுனைகளில் மதிவெடிகள் புதைக்கப்படுகின்றன. மிதிவெடிகள் காரணமாக முன்னேறும் எதிரிகளின் அணியில் ஏற்படும் காயங்கள் மீதமுள்ள போர்வீரர்களை வேறுபாதையினூடாக திசைதிருப்புவது மட்டும் இன்றி அவர்களிற்கு உளவியல் ரீதியான தாக்கத்தையும் ஏற்படுத்துகின்றது. இதன் காரணமாக ஏற்படும் நேர இடைவெளியில் பின்வாங்குதல், மீள ஒன்றிணைதல் போன்ற களமுனைச் செயற்பாடுகளிற்கு நேரம் கிடைக்கக் கூடியவாறாக அமைகின்றது.

மேலும் களமுனைகளில் மதிவெடிகள் களமுனையின் தன்மைக்கேற்றவாறு புதைக்கப்படும் விதம் எண்ணிக்கை என்பன மாறுபடும். பொதுவாக எல்லைப்புற போர்முனைகளில் (சூன்ய பிரதேசத்தில்) மிதிவெடிகள் புதைக்கப்படும் பொழுது செறிவாகவும் பின்வரும் அமைப்புக்களில் ஏதேனும் ஒன்றோ அல்லது பலவோ பயன்படுத்தப்படக்கூடும்

1. நேர்கோட்டு முறை (Line Pattern) : இம் முறையில் மதிவெடிகள் புதைக்கப்படும் பொழுது பொதுவாக பல நிரைகளில் மிதிவெடிகள் புதைக்கப்படுவதுடன் ஓர் நிரையில் உள்ள மிதிவெடிகளிற்கிடையிலான தூரம் 1 தொடக்கம் 02 மீற்றர்களிற்கு இடையில் அமைவதுடன் நிரைகளிற்கு இடையிலான தூரம் பொதுவாக 10 மீற்றர்களிற்கு மேற்படாதவாறும் அமைகப்படும்.

02. "T" வடிவமுறை ( T Pattern) : இம் முறையில் 04 மதிவெடிகள் புதைக்கப்படுவதுடன் ஒவ்வொரு 'T' யும் ஒன்றுக்கொன்று தலைகீழாக அமையுமாறும் புதைக்கப்படுவது வழமையாகும்.

03. முறிகோட்டு வடிவமுறை (Zigzag Pattern): இம்முறையில் மிதிவெடிகள் புதைக்கப்படும் பொழுதும் ஒன்றுக்கு மேற்பட்ட  நிரைகளில் புதைக்கப்படுவது வழமையாகும்

மிதிவெடி புதைகப்படும் வடிவமைப்புக்கள்
எனினும் களமுனைகளில் இருந்து தந்துரோபாய பின்வாங்கல்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் பொழுது பொதுவாக எவ்வித வடிவமைப்புக்களும் இல்லாமலே மிதிவெடிகள் புதைக்கப்படும். ஏனெனில் இங்கு மிதிவெடிகள் புதைக்க நேரம் கிடைக்காது என்பது மட்டுமல்ல மதிவெடிகள் ஒழுங்கின்றி புதைக்கப்பட்டிருக்கும் பொழுது எதிரியால் வேகமாக முன்னேற முடியாது. இந்த சிறிய நேர இடைவெளி பாதுகாப்பாக பின்னகரவோ அல்லது மீள் இணையவோ சந்தர்ப்பமளிக்கும்.
 பலருக்கும் சந்தேகம் ஏற்படலாம் ஏன் களமுனைகளிலும் இவ்வாறு ஒழுங்குமுளையின்றி மிதிவெடிகளைப் புதைக்கலாமே! என்று... ஆனால் சூன்ய பிரதேசத்தில் இவ்வாறான ஒழுங்கற்ற முறையில் புதைக்கப்படும் மிதிவெடிகளால் சொந்த தரப்புக்கே ஆபத்துகள் ஏற்பட வாய்ப்புக்கள் உள்ளது. எதிரியின் நடவடிக்கைகளை கண்காணிக்க எல்லைக்கு வெளியே செல்லும் போர்வீரர்கள் பாதிக்கப்படலாம் அல்லது வலிந்த தாக்குதலில் ஈடுபடும் பொழுது திட்டமிடல்களை மேற்கொள்ள மூடியாது சிரமங்களை ஏற்படுத்தலாம்.

0 comments:

Post a Comment