Tuesday, January 5, 2016

மனிதநேய கண்ணிவெடியகற்றல்


மனிதநேய  கண்ணிவெடியகற்றலானது இராணுவத் தேவைகள் எதுவுமின்றி பொதுமக்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் மிதிவெடி அகற்றப்படுவதனைக் குறிக்த்து நிற்கின்றது. மனிதநேயக் கண்ணிவெடியகற்றல் இராணுவத்தினாலோ அல்லது தொண்டு நிறுவனங்களினாலோ முன்னெடுக்கப்படலாம். பொதுவாக சர்வதேச நாடுகளின் உதவியுன் பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இச்செயற்பாட்டை உலகெங்கும் முன்னெடுக்கின்றன. 

இம் மனிதநேய கண்ணிவெடியகற்றலை ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் மிதிவெடி செயற்றிட்ப்பிரிவு (UNDP Mine Action) ஒருங்கிணைத்தல், தொழில்நுட்ப ஆலோசனை மற்றும் தர உறுதிப்படுத்தலை மேற்கொள்கின்றது.
மிதிவெடியகற்றலில் சர்வதேச மிதிவெடியகற்றல் தரநிர்ணயத்திற்கு   (International Mine Action Standard - IMAS) அமைவாக மிதிவெடியகற்றும் அமைப்புக்களால் தங்களுக்கு பொருத்தமான செயற்பாட்டு நடவடிக்கை நியமங்கள் (Standard Operations Procedures - SOP) உருவாக்கப்பட்டு பின்பற்றப்படும். இதனை ஐக்கியநாடுகள் மதிவெடியகற்றல் பிரிவு உறுதிப்படுத்துகின்றது. 

கண்ணிவெடியகற்றல் என்பது, யுத்தத்தின் பின்னரான வெடிக்கும் எச்சங்கள் யாவும் அகற்றப்படுவதனைக் குறிப்பிடப்படுவதாகும். இதனுள், வெடிக்காத வெடிபொருள்கள், மதிவெடிகள், பொறிவெடிகள் மற்றும் வாகன எதிர்பு கண்ணிவெடிகள் என போரின் எச்சங்கள் பலவும் அடங்கும். பொதுவாக சர்வதேச மிதிவெடியற்றல் நியமங்களின் படி 01cm3 இற்கு அதிகமான வெடிபொருள் உள்ள அனைத்து வெடிபொருட்களும் அகற்றப்பட வேண்டியவையாக  அறிவுறுத்துகின்றது.

0 comments:

Post a Comment