Tuesday, January 5, 2016

GPS தொழில் நுட்பம் உலக நாடுகளின் மேல் அமெரிக்காவின் மேலாதிக்கத்தை அதிகரிக்குமா??


ஜி பி எஸ் தொழில் நுட்பமானது தற்போது பலவகைத் தேவைகளிற்கும் பயன்படுத்தப்படும் ஒன்றாகும்கடலில் செல்லும் கப்பல்கள் தொடக்கம் வீதியில்  செல்லும் வாகனங்கள் வரை தங்களது பாதையை அடையாளங்கண்டு கொள்வதற்காக இதனைப் பயன்படுத்திக் கொள்கின்றனசிறப்பான செயற்பாடுஇலவச சேவைமற்றும் இலகுவான பயன்பாட்டுக்குரிய பயனர் இடைமுகம் என்பன இதன் பாவனையை சாதாரண மக்கள் மத்தியிலும் அதிகரித்துள்ளது.
GPS இன் பாவனையானது வீதி நகர்வுகள் மட்டுமல்ல இராணுவ, புலனாய்வுத்துளை மற்றும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களிற்கு முதுகெலும்பாய் அமைகின்றது.
இவையெல்லாம் நன்றாகத் தான் இருக்கின்றன. தற்பொழுது எழுந்துள்ள சிக்கல் என்னவென்றால் 3ம் தலைமுறை  ஜி பி எஸ்  (GPS) தொழில்நுட்பத்தில் அமெரிக்கா தன் மேலாதிக்கத் தன்மையை அதிகரிப்பது தான் தற்பொழுது எழுந்துள்ள சிக்கல். அதாவது இரண்டாம் தலைமுறை ஜி பி எஸ் தொழில்நுட்பத்தில் பாவனையாளரைக் கட்டுப்படுத்தும் வசதி இல்லை. இதன் காரணமாக அமெரிக்காவினால் எதனையும் கட்டுப்படுத்த முடியாத ம சூழ்நிலை காணப்படுகின்றது. மேலும் அமெரிக்கத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியே அமெரிக்கா விற் கெதிராக பல்வேறு தாக்குதல்களைத் திட்டமிட பலருக்கும் உதவியது வ்  ஜி பி எஸ் தொழில்நுட்பம்.
இதன்காரணமாக பல்வேறு பாவனையைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பங்களுடன் தயாராகின்றது ஜி பி எஸ் 3. இதன் காரணமாக அமெரிக்கா பல நிபந்தனைகளை அதன் பாவனை நாடுகளிடம் நிர்பந்திக்க முடியும்.
எனினும் இவ்வாறான நிலமை ஏற்படும் என்பதனை ஆரம்பத்திலே அறிந்து கொண்ட சில விண்வெளி வலுக்கொண்ட நாடுகள் தங்களுக்கு உரித்தான பிராந்திய அமைவிட வழிகாட்டிப் பொறிமுறைகளை ஏற்படுத்துவதற்கான நடைமுறைகளைத் தொடங்கி விட்டன அவையாவன:

GNOLSS : ரஸ்சியா
Galileo: ஐரோப்பிய ஒன்றியம்
Beidou & COMPASS: சீனா
IRNSS: இந்தியா
QZSS: ஜப்பான்

எனினும் விண்வெளி வலு இல்லாத இலங்கை போன்ற நாடுகளின் நிலை? அமெரிக்காவிடமோ இல்லை இந்த பிராந்திய விண்வெளி வலுமிக்க நாடுகளிடமோ சரணாகதியடைவதைத் தவிர வேறுவழியில்லை.

0 comments:

Post a Comment